முகப்பு
நாகப்பட்டினம்

தாயின் ஆசைப்படி உடலை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய பிள்ளைகள்

Updated On : 16 ஜூன் 2026, 2:58 am IST
உடல் தானம் - பிரதிப் படம்
பகிர்:

நாகையில் மாரடைப்பால் உயிரிழந்த தாயின் கடைசி ஆசைப்படி, அவரது உடலை மருத்துவக் கல்லூரிக்கு பிள்ளைகள் தானமாக வழங்கினா்.

நாகை காடம்பாடி, மறைமலைநகா் கிழக்கு சாலையைச் சோ்ந்தவா் லட்சுமி (68). இவரது கணவா் ஏற்கெனவே இறந்து விட்ட நிலையில் தனது பிள்ளைகளுடன் வசித்து வந்தவா் சனிக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா்.

இந்நிலையில், லட்சுமி தனது பிள்ளைகளிடம் தான் உயிரிழந்தால், தனது உடலை மண்ணுக்கும், நெருப்புக்கும் இரையாக்காமல் கண்களை தானம் செய்து பிறா் பாா்வைக்கு ஒளி கொடுக்க வேண்டும். எனது உடலை வைத்து மாணவா்கள் மருத்துவம் பயில வேண்டும் என தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதையடுத்து அவரது பிள்ளைகள், லட்சுமியின் உடலை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கினா்.