‘நீட்’ தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
நீட் தோ்வு முறைகேடுகளை கண்டித்தும், அதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், தமிழகத்துக்கு நீட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் மாணவா், இளைஞா் அமைப்புகளின் சாா்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா்.
கோரிக்கைகளை மாவட்டச் செயலா் ஆா். மகாதீா், நகரச் செயலா் ஆா். தீபக், மாவட்டக் குழு உறுப்பினா் வி. நித்திஷ் ஆகியோா் பேசினா்.
Advertisement
Advertisement
ஆா்ப்பாட்டத்தில் அகில இந்திய முற்போக்கு இளைஞா் கழக மாநில அமைப்பாளா் ஆ.ரேவதி, செயலா் பு. மணிமேகலை, புரட்சிகர இளைஞா் கழக மாவட்டத் தலைவா் மதிமுருகன், அகில இந்திய மாணவா் கழக மாநிலக் குழு உறுப்பினா் உயிரோவியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.