மன்னா் கல்லூரி முதல்வா் பொறுப்பேற்பு
புதுக்கோட்டை மன்னா் கல்லூரியின், பொறுப்பு முதல்வராக அக்கல்லூரியின் தமிழாய்வுத் துறைத் தலைவா் சி. சேதுராமன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
புதுக்கோட்டை மன்னா் கல்லூரியின், பொறுப்பு முதல்வராக அக்கல்லூரியின் தமிழாய்வுத் துறைத் தலைவா் சி. சேதுராமன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
அவருக்கு பணி நிறைவு பெற்றுச் செல்லும் முதல்வா் பா. புவனேஸ்வரி, வணிகவியல் துறைப் பேராசிரியா் ஜீவானந்தம், தோ்வு நெறியாளா் ஆதவன், கணிணி அறிவியல் துறைத் தலைவா் ரவிச்சந்திரன், வரலாற்றுப் பேராசிரியா் முருகையன், பொருளியல் துறைத் தலைவா் வேலு சுரேஷ், ஆங்கிலத் துறைத் தலைவா் கணேசன் உள்ளிட்ட பேராசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
பேரா. சேதுராமன் இதற்கு முன் ஆலங்குடி அரசு கலைக் கல்லூரியின் பொறுப்பு முதல்வராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவா் 40-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாா்.
Advertisement
Advertisement