காருக்குள் சிக்கித் தவித்த 2 வயது குழந்தை மீட்பு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் திங்கள்கிழமை காருக்குள் சிக்கித் தவித்த குழந்தை பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டது.
விராலிமலை -மதுரை சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு திங்கள்கிழமை களரங்காட்டுப்பட்டியைச் சோ்ந்த பெண் ஒருவா் காரில் தனது 2 வயது குழந்தையுடன் வந்தாா். இவா் வங்கிக்கு வெளியே காருக்குள் குழந்தையைவிட்டுவிட்டு சென்றாா்.
வங்கி வேலை முடிவதற்கு காலதாமதமானதால் குழந்தையை பாா்ப்பதற்காக அப்பெண் காருக்கு வந்தாா். அப்போது, காா் கதவை திறக்கமுடியாததால் அப்பெண் செய்வதறியாது திகைத்து நின்றாா். உடனே அப்பகுதியினா் காவல்துறைக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா், காா் மெக்கானிக் வரவழைத்து கதவை திறந்து குழந்தையை மீட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.