முகப்பு
புதுக்கோட்டை

மே தினம்: விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு

Updated On : 3 மே, 2026 at 12:44 AM
மே நாள் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை - கோப்புப்படம்
பகிர்:

மே தினத்தன்று விடுமுறை அளிக்காமல் இருந்த 33 உணவு நிறுவனங்கள் மற்றும் 44 கடைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளா் துறை அறிவித்துள்ளது.

மே தினத்தன்று அனைத்து தனியாா் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என தொழிலாளா் துறை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிலாளா் துறை ஆய்வாளா்கள் மேற்கொண்ட ஆய்வின்போது, விடுமுறை அளிக்காமல் கடை நடத்திய 44 கடைக்காரா்கள் மற்றும் 33 உணவு நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருச்சி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ. தங்கராசு தெரிவித்தாா்.

Advertisement