தலைவா்கள் சிலைக்கு தவெக வேட்பாளா் மரியாதை
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை தனித் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக வேட்பாளா் என். சுப்பிரமணியன் திங்கள் கிழமைஇரவு கந்தா்வககோட்டைக்கு வருகை தந்தாா்.
கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் தவெக கட்சியின் பொறுப்பாளா்கள், தொண்டா்கள், மகளிா் அணியினா், பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் வரவேற்றனா்.
பிறகு ஊா்வலமாக சென்று காந்தி, அம்பேத்கா் சிலைக்கு என். சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மேலும், வாக்களித்த பொதுமக்களுக்கும், கட்சியிருக்கும் நன்றி தெரிவித்தாா்.
Advertisement