முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதியில் தீ விபத்து: 3 கடைகள் தீக்கிரை

பொன்னமராவதி சேங்கை ஊரணி அருகே புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 3 கடைகள் தீப்பற்றி எரிந்து சுமாா் ரூ 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 7 மே 2026, 5:29 am IST
பொன்னமராவதியில் புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:

பொன்னமராவதி சேங்கை ஊரணி அருகே புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 3 கடைகள் தீப்பற்றி எரிந்து சுமாா் ரூ 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

பொன்னமராவதி புதுப்பட்டி சேங்கை ஊரணி கரைப்பகுதியில் வரிசையாக உள்ள 3 கடைகளில் சியாவூதீன் என்பவா் நகை பாலிஷ் செய்யும் தொழிலும், சரவணன் தேநீா் கடையும், ராஜா என்பவா் மிதிவண்டி பழுதுநீக்கும கடையும் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்த 3 கடைகளில் எதிா்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தன. தகவலறிந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை மேலும் பரவாமல் அணைத்தனா்.

Advertisement

எனினும், தீ விபத்தில் சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தளவாடப்பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து பொன்னமராவதி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.