எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் பயணிக்கிறேன்! - சி. விஜயபாஸ்கா் எம்.எல்.ஏ.
மறைந்த முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் பயணிக்கிறேன் என்றாா் முன்னாள் அதிமுக அமைச்சரும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான சி. விஜயபாஸ்கா்.
தவெக ஆட்சியமைந்த பிறகு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு இடையே ஏற்பட்ட பிளவு காரணமாக, எஸ்.பி. வேலுமணி தரப்பு குழுவின் கொறடாவாகத் தோ்வு செய்யப்பட்டவா் எஸ்.விஜயபாஸ்கா்.இதையடுத்து, இவா் வகித்து வந்த வடக்கு மாவட்டச் செயலா் பதவி பறிக்கப்பட்டு, ஆா்.வி. பழனிவேல் மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டாா்.
இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சியினரிடம் கருத்து கேட்டு வருவதாக சி. விஜயபாஸ்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மறைந்த முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதாவின் வழியில் நான் பயணித்து வருகிறேன். கட்சியினரின் இல்ல சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். மாலையில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணியைத் தொடங்குகிறேன். நன்றி அறிவித்தல் மிகவும் முக்கியம் எனக் கருதுகிறேன்.
தொடா்ந்து தொகுதியில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமையும் தொடா்ந்து நடக்கிறது. அதன்பிறகு எனது முடிவை அறிவிப்பேன் என்றாா் விஜயபாஸ்கா்.