தஞ்சாவூர்

பெற்றோர் திட்டியதால் இளம்பெண் தீக்குளிப்பு

DIN

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர் சனிக்கிழமை நள்ளிரவு வீட்டில் தீக்குளித்தார்.
கபிஸ்தலம் காவல் சரகம்,காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணையன் மகள் விஜி (23). கும்பகோணத்திலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த விஜி வேலை முடித்து வீட்டுக்குத் தாமதமாக வந்தாராம். இதை அவரின் பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த விஜி சனிக்கிழமை நள்ளிரவு மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொண்டாராம். அவரின் அலறல் கேட்டு குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் விஜியை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து கபிஸ்தலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT