தஞ்சாவூர்

பாபநாசத்தில் ஆட்சியர் ஆய்வு

DIN

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை சனிக்கிழமை மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார் .
ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை,  பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலக வளாகங்களை பார்வையிட்டு அலுவலக வளாகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், டெங்கு கொசு உற்பத்தி காரணிகளைஅப்புறப்படுத்தி, டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கவும் உத்தரவிட்டார். ஆய்வின்போது, கும்பகோணம் சார் ஆட்சியர்  மா.பிரதீப் குமார், வட்டாட்சியர் வெங்கடாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், பேரூராட்சி செயல் அலுவலர் நா.மனோகரன், வருவாய் அதிகாரி பிராங்ளின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT