காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை: விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் முடிவு
தமிழகம் முழுவதும் காவிரி நீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ரத யாத்திரை நடத்துவது என தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் காவிரி நீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ரத யாத்திரை நடத்துவது என தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் முடிவு செய்துள்ளது.
கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில் இச்சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து மத்திய அரசு மீது கண்டனம் தெரிவித்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இச்சங்கம் சார்பில் தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் காவிரி நீர் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவிரி ரத யாத்திரை ஏப்ரல் மாத இறுதியில் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத் தலைவர் சின்னதுரை தலைமை வகித்தார். செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், நிர்வாகிகள் சாமிநாதன், வரதராஜன், ஒருங்கிணைப்பாளர் சம்பந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.