தஞ்சாவூர்

அறிவித்தபடி உண்ணாவிரதம் நடைபெறும்

DIN

திட்டமிட்டபடி வரும் 25-ஆம் தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என்றார் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன்.
 ம. நடராஜனின் உடல் அடக்கத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் தினகரன் மேலும் கூறியது: திருச்சியில் வரும் 24 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் தள்ளிவைக்கப்படுகிறது. இக்கூட்டம் ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெறும்.
 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி,  தஞ்சையில் வரும் 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உண்ணாவிரதம் திட்டமிட்டபடி நடைபெறும்.  எங்கள் அணியின் பெயரை தாற்காலிகமாக மாற்றி வைத்துள்ளோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு பொதுச்செயலாளர் சசிகலாதான். அதே போல, மற்ற நிர்வாகிகளும் அதே பொறுப்புகளிலேயே உள்ளனர் என்றார் டிடிவி. தினகரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT