மின்கசிவால் குடிசை எரிந்து சேதம்
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே மின்கசிவால் குடிசை எரிந்து சேதமடைந்தது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே மின்கசிவால் குடிசை எரிந்து சேதமடைந்தது.
ஒரத்தநாடு கக்கரை மேலத்தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கருணாநிதி (48). சனிக்கிழமை தனது மனைவி சித்திரத்துடன் நூறு நாள் வேலைக்குச் சென்று விட்டார்.
இந்த நிலையில் அவரது வீடு தீப்பற்றி எரிவதாக அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில், கருணாநிதி தனது மனைவியுடன் சென்று பார்த்த போது, வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, மரக்கட்டில், 2 பவுன் நகை, ஆதார் ஆட்டை, குழந்தைகளின் புத்தகங்கள், வீட்டில் இருந்த ரூ.10,000 ரொக்கம் போன்றவை தீயில் எரிந்து சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.