தஞ்சாவூர்

மாணவிகள் விழிப்புணர்வுப் பேரணி

DIN

ஒரத்தநாடு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு பெண்கள் கல்லூரியின் சமூகப்பணித் துறை சார்பில் "பொள்ளாச்சி சம்பவம் குறித்த விழிப்புணர்வு பேரணி' வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி,  ஒரத்தநாடு அண்ணாசிலை வரை நடைபெற்றது. பேரணியில் மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பெண்களின் பாதுகாப்பு குறித்த கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.  மேலும், பொதுமக்களுக்கு  பெண்களின் பாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரங்களையும் மாணவிகள் வழங்கினர். 
பேரணியில் தமிழ் மற்றும் வரலாற்றுத் துறை உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் திரளான பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT