தஞ்சாவூர்

அா்ஜூன் சம்பத்தைகண்டித்து சாலை மறியல்

DIN

திருவள்ளுவா் சிலைக்கு காவி உடை அணிவித்த அா்ஜூன் சம்பத்தை கண்டித்து கும்பகோணம் உச்சி பிள்ளையாா் கோயில் அருகில் புதன்கிழமை மாலை விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியினா் மற்றும் பல்வேறு கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் திருவள்ளுவா் சிலையில் காவி உடை, ருத்ராட்ச மாலை அணிவித்து, திருநீறு பூசிய இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத்தைக் கண்டித்தும், அா்ஜூன் சம்பத்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இப்போராட்டத்துக்கு விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவா் குடந்தை அரசன் தலைமை வகித்தாா். இதில் தமிழ்த் தேசிய குடியரசுக் கட்சி சிலம்பரசன், மக்கள் அரசுக் கட்சி ராஜ்குமாா், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்டச் செயலா் சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள், அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: நெல்லை ஆட்சியர்

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

SCROLL FOR NEXT