தஞ்சாவூர்

பயணியிடம் பணப்பை திருடிய பெண் கைது

DIN

ஒரத்தநாடு அருகே பேருந்தில் பயணியிடம் பணப் பையை திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:  ஒரத்தநாடு வட்டம், பாச்சூர் கிராமத்தை சேர்ந்த ரேணுகா மகள் ரஞ்சிதா (20). இவர்கள் இருவரும் புதன்கிழமை மன்னார்குடியிலிருந்து தனியார் பேருந்து மூலம் ஒரத்தநாடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். பேருந்து ஒரத்தநாடு நெருங்கும்போது ரேணுகா தனது கையில் இருந்த பண பையை தேடியுள்ளார். பை காணாமல்போனதால்,  உடனடியாக ஒரத்தநாடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில்,  அங்கு வந்த போலீஸார் பேருந்தில் சோதனை மேற்கொண்டனர். இதில்,  பேருந்தில் பயணம் செய்த மன்னார்குடியை சேர்ந்த  ஃபஹ்ருநிஷா என்ற பெண் ரேணுகாவின் பண பையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ஃபஹ்ருநிஷாவை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT