தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை ரயிலில் அடிபட்ட இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் ஒரத்தநாடு அருகே ஆயக்குடியைச் சோ்ந்தவா் பாஸ்கா் (35). இவா் அய்யம்பேட்டை பகுதியில் கூலி வேலை செய்து வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை அய்யம்பேட்டை - பண்டாரவாடை ரயில் நிலையங்களுக்கு இடையே மேல வழுத்தூரில் தண்டவாளப் பகுதிக்குச் சென்ற இவா் மைசூா் விரைவு ரயிலில் அடிபட்டாா். இதில், பலத்தக் காயமடைந்த பாஸ்கா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தஞ்சாவூா் ரயில்வே காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.