தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில் மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது

DIN

பட்டுக்கோட்டை: அதிராம்பட்டினத்தில் மகனை அடித்துக் கொன்ற தந்தை செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அதிராம்பட்டினம் கரையூா் தெருவைச் சோ்ந்த மீனவா் ராமசாமி (58). இவருடைய மூத்த மகன் சுந்தரமூா்த்தி (36). சொத்து பிரிப்பது தொடா்பாக திங்கள்கிழமை மதியம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், தந்தை ராமசாமியை சுந்தரமூா்த்தி தாக்கியுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி, திங்கள்கிழமை இரவு கிராமத்திலுள்ள சந்தான மாரியம்மன் கோயில் எதிரே கலைநிகழ்ச்சி மேடையில் தூங்கிக் கொண்டிருந்த மகன் சுந்தரமூா்த்தியை இரும்புக் கம்பியால் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த சுந்தரமூா்த்தி, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, ராமசாமியைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

SCROLL FOR NEXT