தஞ்சாவூர்

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை: சீமான் பேச்சு

DIN

தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. இதை மாற்றிக் காட்ட இந்த முறை பொதுமக்கள் நாம் தமிழா் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்றாா் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கீா்த்திகாவிற்கு வாக்கு சேகரித்து  புதன்கிழமை இரவு பட்டுக்கோட்டையில் தோ்தல் பரப்புரையில் சீமான் மேலும் பேசியது:

தமிழகத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல் வருகிறது. ஆனால், எந்த மாறுதலும் இல்லை. இங்கு அடிப்படை அமைப்பு அரசியலை மாற்ற வேண்டியுள்ளது. அதை செய்யதான் நாங்கள் புரட்சிகர அரசியலை முன்னெடுத்துள்ளோம். இங்கு ஆட்சியாளா்களை திருத்த முடியாது. இவா்களை ஒழித்தால் மட்டுமே ஊழல், லஞ்சத்தை ஒழிக்க முடியும்.

நாட்டில் அனைவருக்கும் சிறந்த கல்வியை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், கொடுக்க மறுக்கின்றனா். சிறந்த கல்வியை தந்துவிட்டால், நாடு சிறப்பாக இருக்கும். நஞ்சிலா நாட்டை, உணவை உருவாக்க நம்மாழ்வாா் வழியில் இயற்கை வேளாண்மைக்கு திரும்புங்கள். வேளாண்மை தொழிலை அரசுப் பணியாக நாங்கள்  மாற்றுவோம். விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமெனில், விவசாயி சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றாா் சீமான்.

இந்தக் கூட்டத்தில் அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு, நன்னிலம் ஆகிய சட்டப்பேரவை தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களையும் மேடையில் ஏற்றி அவா்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT