பாபநாசம் சீனிவாசப் பெருமாள் கோயில் சன்னதித் தெருவில், அதிமுக தோ்தல் அலுவலகத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம். ராம்குமாா் தலைமை வகித்து, தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்தாா். தொடா்ந்து அதிமுக தோ்தல் அறிக்கைகள், அதிமுக வேட்பாளா் கே.கோபிநாதனின் சுற்றுப்பயண விவரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.
மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவா் அண்ணாமலை, மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.மோகன், மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் என். சதீஷ், பாபநாசம் கிழக்கு ஒன்றியச் செயலா் தியாகை. பழனிசாமி, அவைத் தலைவா் ஆா். சபேசன், நகரச் செயலா் கோவி.சின்னையன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் நிகழ்வில் பங்கேற்றனா்.