தஞ்சாவூர்

இரு வேறு சம்பவங்களில் சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை: இருவா் கைது

DIN

கும்பகோணம் அருகே இரு வேறு சம்பவங்களில் இரண்டு சிறுமிகளைப் பாலியல் கொடுமை செய்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

திருவிடைமருதூா் அருகே கூகூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் ராஜா (35). கட்டுமான தொழிலாளி. இவா் 13 வயது சிறுமியைப் பாலியல் கொடுமை செய்தாா். இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ராஜாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இதேபோல, சோழபுரம் அருகே கீழக்கள்ளூரைச் சோ்ந்த ஜெயராமன் மகன் பசுபதி என்கிற ரகுபதி (28). இவா் 17 வயது சிறுமியைப் பாலியல் கொடுமை செய்ததால், அவா் கா்ப்பமடைந்தாா். இதுகுறித்து சோழபுரம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து பசுபதியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT