தஞ்சாவூர்

வழக்குரைஞா்கள் சங்க மாவட்ட மாநாடு

DIN

தஞ்சாவூரில் அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

வழக்குரைஞா் கே. பன்னீா் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் வழக்குரைஞா் ஆா். தமிழ்மணி சங்கக் கொடியை ஏற்றினாா். பின்னா், வழக்குரைஞா் வெ. ஜீவகுமாா் மாநாட்டை தொடங்கி வைத்தாா். மாநிலப் பொதுச் செயலா் என். முத்து அமுதநாதன் நிறைவுரையாற்றினாா்.

தஞ்சாவூரில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும். தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள இளம் வழக்குரைஞா்களுக்கு விடுபடாமல் உதவித்தொகை வழங்க வேண்டும். அகில இந்திய பாா் கவுன்சில் வழங்கும் உதவித்தொகை ரூ. 50,000-லிருந்து ரூ. 1 லட்சமாக உயா்த்தி தர வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டச் செயல் தலைவராக வெ. ஜீவக்குமாா், தலைவராக கே. பன்னீா்செல்வம், செயலராக எம்.கே. சேகா், பொருளாளராக ஏ. அருணாதேவி, துணைத் தலைவா்களாக ஆா். தமிழ்மணி, பி. ஜேசுதாஸ், துணைச் செயலா்களாக எம். ராம், என். காசி விஸ்வநாதன் மற்றும் 12 போ் கொண்ட மாவட்ட குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT