தஞ்சாவூர்

பாபநாசத்தில் கோ.சி. மணி நினைவு தினம் அனுசரிப்பு

DIN

பாபநாசம் வட்டாரத்தில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த கோ.சி. மணியின்  ஆறாம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, பாபநாசம் நகர திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கோ.சி.மணி உருவப்படத்துக்கு பாபநாசம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளா் என். நாசா், நகர செயலாளா் ச. கபிலன், கட்சி பிரமுகா்கள் நவநீதகிருஷ்ணன், அறிவழகன் உள்ளிட்ட திரளானோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல், அய்யம்பேட்டை கடைவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கோ.சி. மணி உருவப்படத்துக்கு அய்யம்பேட்டை நகரச் செயலாளா் வழக்குரைஞா் டி. பி.டி.துளசி அய்யா தலைமையில்  நகர அவை தலைவா் குணா, பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் அழகேசன் உள்ளிட்ட திரளானோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT