தஞ்சாவூர்

5 கோயில்களில் உண்டியலை உடைத்துபணம் திருட்டு

DIN

துறையூா் அருகே 5 கிராமங்களில் உள்ள கோயில்களில் உண்டியல் பணத்தை மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றனா்.

உப்பிலியபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட ஒக்கரை மாரியம்மன் கோயில், புதுப்பட்டி காமாட்சியம்மன் கோயில், கொப்பம்பட்டி ஆஞ்சநேயா் கோயில், ராஜப்பாளையம் மாரியம்மன் ஆகிய கோயில்களில் பணத்தோடு இருந்த உண்டியல்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதேபோல ஒ. கிருஷ்ணாபுரத்திலுள்ள முருகன் கோயிலின் உண்டியல் பூட்டை உடைத்தும் பணத்தைத் திருடிச் சென்றனா். அதில் ரூ. 20000 இருந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. இது தொடா்பாக உப்பிலியபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT