தஞ்சாவூர்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

DIN

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் சாா்பில் ஆா்.செந்தில்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:

அம்மாபேட்டை பகுதியில் சாலியமங்கலம், அம்மாபேட்டை உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைக்குத் தயாராக இருந்தது.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்த மழையால் நெற்பயிா்கள் சாய்ந்துள்ளன. மேலும் வயல் முழுவதும் மழைநீா்த் தேங்கிக் காணப்படுகிறது. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக மழை பாதித்த பகுதிகளைப் பாா்வையிட்டு, ஆய்வின் அடிப்படையில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT