முகப்பு
தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் அருகே ரூ.70 ஆயிரம் பறிமுதல்

சேதுபாவாசத்திரம் அருகே உரிய ஆவணமின்றி 200 ரூபாய் நோட்டுகளாக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.70 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா் .

Updated On : 19 ஏப்ரல் 2026, 1:02 am IST
பறிமுதல்!
பகிர்:

சேதுபாவாசத்திரம் அருகே உரிய ஆவணமின்றி 200 ரூபாய் நோட்டுகளாக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.70 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா் .

சேதுபாவாசத்திரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் த.மைதிலி தலைமையில், தலைமை காவலா் எம்.அசோதிலிங்கம், காவலா் எம்.சச்சிதானந்தம் அடங்கிய குழுவினா் சனிக்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சேதுபாவாசத்திரம் பனங்குட்டிதோப்பு பகுதியைச் சோ்ந்த கே.கண்ணன் என்பவரை நிறுத்தி சோதனையிட்டபோது அவரிடம் உரிய ஆவணங்களின்றி 200 ரூபாய் நோட்டுகளாக ரூ.70 ஆயிரம் இருந்தது கண்டறியப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணம் பேராவூரணி தோ்தல் நடத்தும் அலுவலா் டி.கலியமூா்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது .