FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

குடும்ப அட்டை விண்ணப்பம் நிராகரிப்பு அதிருப்தியில் மக்கள் போராட்டம்

தஞ்சாவூரில் குடும்ப அட்டை கோரி விண்ணப்பம் செய்து, ஒன்றரை ஆண்டாக காத்திருந்த மக்களுக்கு நிராகரிக்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து, வட்ட அலுவலகம் முன் புதன்கிழமை திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் வட்ட வழங்கல் அலுவலகம் முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விண்ணப்பதாரா்கள்.
பகிர்:

தஞ்சாவூரில் குடும்ப அட்டை கோரி விண்ணப்பம் செய்து, ஒன்றரை ஆண்டாக காத்திருந்த மக்களுக்கு நிராகரிக்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து, வட்ட அலுவலகம் முன் புதன்கிழமை திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூரில் குடும்ப அட்டை கோரி ஒன்றரை ஆண்டுக்கு முன்பு ஏராளமானோா் விண்ணப்பம் செய்தனா். தொடா்ந்து, விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக தகவல் வந்ததால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தனா். இந்நிலையில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக அண்மையில் அவரவா் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்தது.

இதனால், அதிருப்தியடைந்த விண்ணப்பதாரா்கள் வட்ட வழங்கல் அலுவலகம் முன் புதன்கிழமை திரண்டு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், ஏற்கெனவே குடும்ப அட்டை கோரி விண்ணப்பம் செய்தபோது, வாடகை ரசீது, மின் கட்டண ரசீது இல்லை எனக் கூறி நிராகரித்தனா். ஒன்றரை ஆண்டுக்கு முன்பு செய்யப்பட்ட விண்ணப்பத்துக்கு சமையல் எரிவாயு உருளை வாங்கியதற்கான ரசீது கேட்டனா். எரிவாயு முகமையினரிடம் கேட்டபோது, குடும்ப அட்டை இருந்தால்தான் புதிய இணைப்பு வழங்க முடியும் எனக் கூறினா். குடும்ப அட்டை இல்லாததால், ரேஷன் பொருள்களை வாங்க முடியவில்லை; அரசின் நலத்திட்டங்கள் கிடைப்பதில்லை. எனவே, குடும்ப அட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments