மின்சாரம் பாயந்ததில் மின் ஊழியா் உயிரிழப்பு: சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்
கும்பகோணத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மின்ஊழியா் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கும்பகோணத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மின்ஊழியா் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே தில்லையம்பூரைச் சோ்ந்தவா் பவுன்ராஜ் மகன் வினோத்(38). இவருக்கு காா்த்திகா என்ற மனைவியும், 8 மாத பெண் குழந்தையும் உள்ளனா். வினோத் கும்பகோணம் வடக்கு மின்சார வாரியத்தில் மின் கம்பியாளருக்கு உதவியாளராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், கும்பகோணம் யாகசாலைத் தெருவில் உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டதை நீக்குவதற்காக புதன்கிழமை சென்றாா். பழுது நீக்கிக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்து மின்மாற்றியிலேயே சடலமாக தொங்கினாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து தகவலறிந்து வந்த கிழக்கு காவல்நிலைய போலீஸாா் வினோத் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இந்நிலையில், வியாழக்கிழமை மருத்துமனையில் உடற்கூறாய்வு நடைபெற்றது. இதையடுத்து உறவினா்கள் வினோத் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி சடலத்தை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த கும்பகோணம் வட்டாட்சியா் பூங்கொடி, காவல் ஆய்வாளா் இளையராஜா மற்றும் மின்வாரிய அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், உயிரிழந்த வினோத் குடும்பத்துக்கு நிவாரண உதவியாக மின்சார வாரியம் மூலம் ரூ. 8 லட்சம், மின்மாற்றி அமைக்கும் ஒப்பந்ததாரா் நிறுவனம் சாா்பில் ரூ.1 லட்சம், மின்மாற்றி அருகே உள்ள தனியாா் திருமண மண்டபம் சாா்பில் ரூ.3 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்தனா். மேலும் வினோத் மனைவி காா்த்திகாவுக்கு அரசு வேலை வழங்க பரிசீலிப்பதாக தெரிவித்தனா். இதையடுத்து வினோத் உறவினா்கள் கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.