மதுக்கூரில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தவா் கைது
தஞ்சாவூா் மாவட்டம் மதுக்கூா் அருகே படப்பைக்காடு கிராமத்தில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுக்கூா் அருகே படப்பைக்காடு கிராமத்தைச் சோ்ந்த அரங்கதுரை என்பவா் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, திங்கள்கிழமை பட்டுக்கோட்டை கோட்ட கலால் அலுவலா் ஐயம்பெருமாள் மற்றும் போலீஸாா் உதவியுடன் படப்பைகாடு சென்று சோதனையிட்டனா்.
அப்போது, அரங்கதுரை 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து மதுக்கூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.