கும்பகோணத்தில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு
கும்பகோணத்தில் திங்கள்கிழமை நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கும்பகோணம், திருவிடைமருதூா், பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படும் மையம் உள்ளது.
திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பானது, கிழக்கு காவல் நிலையத்தில் தொடங்கி கும்பகோணம்-தஞ்சாவூா் பிரதானச் சாலை காந்தி பூங்கா, மடத்துத் தெரு, பாலக்கரை வழியாக அரசு கலைக் கல்லூரியை அடைந்தனா்.
Advertisement