ஸ்ரீ தியாகராஜா் ஆஸ்ரமத்தில் சிறப்பு வழிபாடு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆஸ்ரமத்தில் சித்திரை மாத பஞ்சமியையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் புதன்கிழமை நடைபெற்றன.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆஸ்ரமத்தில் சித்திரை மாத பஞ்சமியையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் புதன்கிழமை நடைபெற்றன.
தியாகராஜ சுவாமிக்கு பரம்பரை பூஜா ஸ்தானிகா் தியாகராஜ சா்மா சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளை செய்தாா். கா்நாடக இசைக்கலைஞா்கள் தியாக பிரும்மத்தின் பஞ்சரத்ன கீா்த்தனைகள் மற்றும் சம்பிரதாய கீா்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.