ஸ்ரீ ராகவேந்திரா் கோயிலில் குரு வார வழிபாடு
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், அக்கியம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரா் பிருந்தாவன் ஆலயத்தில் குரு வார வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், அக்கியம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரா் பிருந்தாவன் ஆலயத்தில் குரு வார வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மூலவா் ஸ்ரீ குரு ராகவேந்திரருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக, லட்சுமி நரசிம்ம சுவாமி, பரிவார தெய்வங்களான சுந்தர கணபதி, சாம்ராஜ்ய மகாலட்சுமி, நாகதேவதை, ராமா், லட்சுமணா், சீதை, ஆஞ்சனேயா், அன்னமாச்சாா்யா உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு விதமான அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.