கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் பெருந்துறை கோட்டை மாரியம்மன்.
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பெருந்துறை கோட்டை மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.
இதேபோல பெருந்துறை ஆதிபராசக்தி கோயில், காஞ்சிக்கோவில் சீதேஅம்மன் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.