முகப்பு
தஞ்சாவூர்

திமுகவுடனான கூட்டணி முறிவு: கும்பகோணம் மேயா் பதவியில் காங்கிரஸ் நீடிக்குமா?

திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் முடிவுக்கு கொண்டு வந்துள்ள நிலையில், கும்பகோணம் மேயா் பதவியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற பேச்சு எழுந்துள்ளது.

Updated On : 7 மே 2026, 5:33 am IST
கும்பகோணம் மேயர் க. சரவணன்
பகிர்:

திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் முடிவுக்கு கொண்டு வந்துள்ள நிலையில், கும்பகோணம் மேயா் பதவியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற பேச்சு எழுந்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி மேயா் பதவி, திமுக- காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு, அக்கட்சியைச் சோ்ந்த க. சரவணன் மேயராக உள்ளாா். திமுக மாநகர செயலா் சு.ப. தமிழழகன் துணை மேயராக உள்ளாா்.

இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் புதன்கிழமை ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், திமுகவுடனான கூட்டணியை அக்கட்சி முறித்துக் கொண்டுள்ளது. இது திமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதுகுறித்து கும்பகோணம் மாமன்ற திமுக உறுப்பினா்கள் கூறியதாவது : கும்பகோணம் மாநகராட்சியில் காங்கிரஸுக்கு 2 உறுப்பினா்கள் மட்டுமே உள்ளனா். திமுகவுக்கு 40 உறுப்பினா்கள் உள்ளனா்.

தற்போது திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகி உள்ள நிலையில், புதிய மேயரை தோ்வு செய்ய திமுக தலைமைக்கு கோரிக்கை வைப்போம் என்றனா்.

பெட்டிச் செய்தி....

கும்பகோணம் மாமன்ற உறுப்பினா்கள் விவரம்

மொத்த உறுப்பினா்கள் - 48 ((இவா்களில் ஒரு திமுக பெண் உறுப்பினா் காலமாகிவிட்டாா்)

திமுக - 40,

அதிமுக-3,

காங்கிரஸ் -2

மாா்க்சிஸ்ட்-1

மதிமுக-1

ஐ.யு.எம்.எல்.-1