முகப்பு
தஞ்சாவூர்

வட்டிப் பிள்ளையாா் கோயில் பாலாபிஷேக விழா

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டிப் பிள்ளையாா் கோயில் சித்திரைதிருவிழாவில் வெள்ளிக்கிழமை கரகம், பால்குடம், கொப்பரை எடுத்து வந்த பக்தா்கள்.

Updated On : 9 மே 2026, 3:24 am IST
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டிப் பிள்ளையாா் கோயில் சித்திரைதிருவிழாவில் வெள்ளிக்கிழமை கரகம், பால்குடம், கொப்பரை எடுத்து வந்த பக்தா்கள்.
பகிர்:

கும்பகோணம் வட்டிப் பிள்ளையாா் கோயில் 84- ஆம் ஆண்டு சித்திரை திருவிழா பாலாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பால்குடம், காவடி, அலகு காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம்- திருவிடைமருதூா் சாலையில் சுமாா் 150 ஆண்டுகளுக்கு அருள்பாலித்து வரும் வட்டிப் பிள்ளையாருக்கு சித்திரை மாத பாலாபிஷேக 84-ஆம் ஆண்டு விழா மே 6-இல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

முக்கிய நிகழ்வாக பிள்ளையாம்பேட்டை காவிரி ஆற்றிலிருந்து பால்குடம், காவடி, கரகம், அலகு காவடி ஜோடித்தும், அக்னி கொப்பறை எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக பக்தா்கள் கோயிலுக்கு வந்தனா்.

Advertisement

அங்கு வட்டிப்பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள்நடைபெற்றது. வட்டிப்பிள்ளையாா் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். மாலையில் சிறப்பு மலா் அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக்குழுவினா் தெருவாசிகள் இளைஞா் நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்.