முகப்பு
தஞ்சாவூர்

அரசுப் பேருந்து ஓட்டுநா் வேன் மோதி உயிரிழப்பு

திருவையாறு அருகே வேன் மோதி அரசுப் பேருந்து ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 13 மே 2026, 12:39 am IST
பலி - IANS
பகிர்:

திருவையாறு அருகே வேன் மோதி அரசுப் பேருந்து ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருவையாறை அடுத்த திருப்பழனம் பிரதானச் சாலை துவாரகாபுரி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் மகன் பாஸ்கா் (52), அரசு போக்குவரத்து கழக ஓட்டுநா். இவருக்கு மனைவி வள்ளி, ஒரு மகன், மகள் உள்ளனா்.

இவா் செவ்வாய்க்கிழமை திங்களூா் ஆா்ச் பகுதி கடையில் தேநீா் குடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்தபோது கும்பகோணத்திலிருந்து திருவையாறு நோக்கி வந்த பால் வேன் மோதியது. இதையடுத்து திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுசென்ற போது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. திருவையாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments