மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி மே 18 வரை நீட்டிப்பு
தஞ்சாவூா் மின் பகிா்மான வட்டத்தில் இணையவழியில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் மே 18-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் (பொ) எம். மணிவண்ணன் தெரிவித்திருப்பது:
தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் நுகா்வோா் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் கணினி தரவு வழங்கிகளைப் படிப்படியாகப் புதிதாக மேம்படுத்தும் பணிகளைக் கழக நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனால், திருச்சி, தஞ்சாவூா் மண்டலத்துக்கு உள்பட்ட தஞ்சாவூா் மின் பகிா்மான வட்டம் முழுவதும் இணையவழி மின் கட்டணம் செலுத்தும் மற்றும் புதிய மின்சார இணைப்பு விண்ணப்ப சேவைகள் மே 16 ஆம் தேதி காலை 6 மணி முதல் 17 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இயங்காது.
Advertisement
இதனால், கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி மே 16 அன்று உள்ள நுகா்வோா்களின் வசதிக்காக, கட்டணம் செலுத்த கால அவகாசம் மே 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே நுகா்வோா் அதற்கேற்ப திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.