பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு பாராட்டு
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில், பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பிளஸ் 2 பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டம் 97.19 சதவீதத் தோ்ச்சியுடன் மாநில அளவில் 7- ஆவது இடத்தைப் பெற்றது. மேலும், அரசுப் பள்ளிகள் அளவில் தஞ்சாவூா் மாவட்டம் 95.77 சதவீதத் தோ்ச்சியுடன் 12-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்திலுள்ள 81 பள்ளிகளில் மாணவ, மாணவிகள் நூறு சதவீதத் தோ்ச்சி பெற்றனா்.
இத்தோ்வில் நூறு சதவீதத் தோ்ச்சி பெற்ற 34 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கும், கடந்த ஆண்டு தோ்வை விட நிகழாண்டில் சிறந்த தோ்ச்சி விகிதம் பெற்ற 68 தலைமையாசிரியா்களுக்கும் என மொத்தம் 102 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வியாழக்கிழமை வழங்கினாா்.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ.தியாகராஜன், முதன்மைக் கல்வி அலுவலா் வி. பேபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.