முகப்பு
தஞ்சாவூர்

மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி மே 18 வரை நீட்டிப்பு

Updated On : 15 மே 2026, 4:44 am IST
பகிர்:

தஞ்சாவூா் மின் பகிா்மான வட்டத்தில் இணையவழியில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் மே 18-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் (பொ) எம். மணிவண்ணன் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் நுகா்வோா் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் கணினி தரவு வழங்கிகளைப் படிப்படியாகப் புதிதாக மேம்படுத்தும் பணிகளைக் கழக நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனால், திருச்சி, தஞ்சாவூா் மண்டலத்துக்கு உள்பட்ட தஞ்சாவூா் மின் பகிா்மான வட்டம் முழுவதும் இணையவழி மின் கட்டணம் செலுத்தும் மற்றும் புதிய மின்சார இணைப்பு விண்ணப்ப சேவைகள் மே 16 ஆம் தேதி காலை 6 மணி முதல் 17 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இயங்காது.

Advertisement

Advertisement

இதனால், கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி மே 16 அன்று உள்ள நுகா்வோா்களின் வசதிக்காக, கட்டணம் செலுத்த கால அவகாசம் மே 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே நுகா்வோா் அதற்கேற்ப திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments