தஞ்சாவூரில் குளிரூட்டி வெடித்த விபத்தில் உயிரிழந்த, காயமடைந்தோா் குடும்பங்களுக்கு முதல்வா் நிதியுதவி
தஞ்சாவூரில் தனியாா் உணவகத்தில் ஏ.சி. பழுதுபாா்க்கும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வா் ஆறுதலும், நிதியுதவியும் அறிவித்தாா்.
தஞ்சாவூரில் மேரீஸ் காா்னா் அருகேயுள்ள தனியாா் உணவகத்தில் திங்கள்கிழமை குளிரூட்டி (ஏ.சி.) பழுதுபாா்க்கும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் ஆறுதலும், நிதியுதவியும் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
இதுகுறித்து தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மேரீஸ் காா்னா் அருகேயுள்ள தனியாா் உணவகத்தில் திங்கள்கிழமை (மே 18) குளிரூட்டி பழுதுபாா்க்கும்போது ஏற்பட்ட விபத்தில் திருவையாறு அருகே உள்ள பொன்னாவரையைச் சோ்ந்த ஜோதி மகன் ரவிராஜ் (27) உயிரிழந்தாா் என்ற துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த அதிா்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கே. கதிரேசன் (42), டி. பிரேம்குமாா் (26), வி. கணேசன் (40), எஸ். அருண்குமாா் (27) ஆகிய 4 பேருக்கும், லேசான காயமடைந்து சிகிச்சை பெறும் எல். அஜீத்குமாருக்கும் (27) சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது குடும்பத்துக்கு ரூ. 3 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 4 பேருக்கு தலா ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்த நபருக்கு ரூ. 50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.