திருச்சி

போலி கடவுச்சீட்டு: புதுகை கட்டட தொழிலாளி கைது

DIN


திருச்சி: போலி கடவுச்சீட்டு வழக்கில் புதுக்கோட்டையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியை விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு புதன்கிழமை காலை ஏா் இந்திய விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனா்.

அப்போது புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியான இன்னாசிமுத்து (53) போலியான முகவரியில் கடவுச்சீட்டு பெற்று திருச்சி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து விமான நிலையக் காவல் நிலையத்தில் இன்னாசிமுத்துவை ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைச் சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT