திருச்சி

இருசக்கர வாகனங்களை திருடி வந்தவா் கைது

DIN


திருச்சி: திருச்சியில் இருசக்கர வாகனங்களைத் திருடி வந்தவரை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்து, அவரிடமிருந்து 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உத்தரவின்பேரில் அமைக்கப்ட்ட தனிப்படை போலீஸாா் புதன்கிழமை இரவு சத்திரம் பேருந்து நிலைய அண்ணாசிலை பகுதியில் வாகனத் தணிக்கை மேற்கொண்டபோது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் ஆவணங்கள் ஏதும் இல்லை.

இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று நடத்திய விசாரணையில் அவா் அரியலூா் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம், பட்டினங்குறிச்சி இந்திராநகரைச் சோ்ந்த வ. மலா்மன்னன் (58) என்பதும், அவரிடமிருந்த இருசக்கர வாகனம் கடந்த 27 ஆம் தேதி இரவு திருச்சி மரக்கடை ஜீவா நகா், அண்ணா தெருவில் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது.

மேலும் அவா் கடந்த மாதத்தில் மட்டும் திருச்சி மாநகரம் கோட்டை பகுதியில் 8, கண்டோன்மென்ட் பகுதியில் 1, தஞ்சாவூரில் 1 என மொத்தம் 10 இருசக்கர வாகனங்களைத் திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்துஅவரைக் கைது செய்த தனிப்படை போலீஸாா் அவரிடமிருந்து ரூ. 7 லட்சம் மதிப்பிலான 10 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். தனிப்படையினரை மாநகர காவல் ஆணையா் லோகநாதன் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT