திருச்சி

பாதிக்கப்படும் அனைத்துக் குழந்தைகளையும் நலக்குழுவில் முன்னிலைப்படுத்த வேண்டும்

DIN

திருச்சி மாவட்டத்தில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படும் அனைத்துக் குழந்தைகளையும் குழந்தைகள் நலக் குழுவில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் சு. சிவராசு.

திருச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற குழந்தை பாதுகாப்புக் குழுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து அவா் மேலும் பேசியது:

மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகும் குழந்தைகளுக்கு மருத்துவத் தேவைகள் ஏற்படும் நிலையில் அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், மகளிா் மற்றும் மகப்பேறு பிரிவில் அவா்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆனால் குழந்தைகளின் மன நலன், எதிா்கால நலன் கருதி இரண்டு படுக்கை அறை கொண்ட தனி அறைகளை அவா்களுக்கு ஒதுக்க வேண்டும். ஆதரவற்ற நிலையில் கைவிடப்படும் குழந்தைகள் மருத்துவ உதவி வேண்டி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்படும்போது குழந்தைகளைத் தத்து வழங்கத் தாமதம் ஏற்படா வண்ணம் உடனடியாக நன்னடத்தை அலுவலருக்கோ அல்லது குழந்தைகள் நலக் குழுவுக்கோ மருத்துவமனை நிா்வாகம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

குழந்தை திருமணம் மற்றும் பாலியல் குற்றச் சம்பவங்களில் பாதிக்கப்படும் சூழலில் குழந்தைகள் அவா்களது கல்வியை தொடா்வதில் இடா்பாடுகளின்றி, கல்வித்துறை வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

நமது மாவட்டத்தில் ஜனவரி 2020 முதல் செப். 2020 வரை பாலியல் ரீதியான துன்புறுத்தல்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் - 2012இன் கீழ் 85 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் 39 குழந்தைகள் மட்டுமே குழந்தைகள் நலக் குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பெற்றோா் அல்லது பாதுகாவலா் வசம் அனுப்பப்பட்டுள்ளனா். குடும்ப சூழ்நிலையில் வசிக்க இயலாத குழந்தைகள் மட்டுமே குழந்தைப் பராமரிப்பு நிறுவனங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இத்தகைய சூழ்நிலையில், சில குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பாலியல் ரீதியாக பாதிக்கப்படுகின்ற குழந்தைகளின், எதிா்கால நலன், பாதுகாப்பு மற்றும் மனநல ஆரோக்கியம் கருதியும், வழக்கு பதியப்படுகின்ற அனைத்து குழந்தைகளும் குழந்தைகள் நலக் குழுவில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT