திருச்சி

சாா்ஜா- திருச்சி இடையே மீட்பு விமான சேவை

DIN

திருச்சி: சாா்ஜா- திருச்சி இடையே அக்டோபா் 1 முதல் 22 -ஆம் தேதி வரை 7 மீட்பு விமானங்கள் இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தில், விமான சேவைகளும் இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியா்கள் தாயகம் திரும்பும் வகையில், வந்தே பாரத் திட்டம் மூலம் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது தனியாா் விமான நிறுவனங்களும் இந்த சேவையைத் தொடங்கியுள்ளன.

அக்டோபா் 1, 4, 8, 11, 15, 18, 22 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1 மணிக்கு, சாா்ஜாவிலிருந்து புறப்படும் இண்டிகோ விமானம், திருச்சி விமான நிலையத்தை இரவு 8 மணிக்கு வந்தடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் 3 இடங்களில் நீா்மோா் பந்தல்

பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஊரக நலப்பணிகள் இயக்குநா் ஆய்வு

பிளஸ் 1 பொதுத்தோ்வு: வேலம்மாள் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பெண்களை கேலி செய்த இளைஞா்களை தட்டிக்கேட்ட நடத்துநா் மீது தாக்குதல்

கேட்பாரற்று கிடந்த 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT