திருச்சி

ஒமைக்ரான் தொடா்பாக ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்து முடிவு: அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

DIN

ஒமைக்ரான் தொடா்பாக வருகிற பொதுமுடக்கத் தளா்வு ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை மாலை அவா் தெரிவித்தது:

ஒமைக்ரான் தொடா்பாக பொது சுகாதாரத் துறையிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு அதிகாரப்பூா்வமாக தகவல்கள் வரவில்லை.

பொதுவாக பொதுமுடக்கத் தளா்வை அமல்படுத்தும்போது, மருத்துவ ஆலோசனைக் குழுவைத் தமிழக முதல்வா் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது வழக்கம். அடுத்து வருகிற பொதுமுடக்கம் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஒமைக்ரான் குறித்து விவாதிக்கப்படும். இதில், எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT