திருச்சி

பைக்கில் சென்றவா் காா் மோதி பலி

DIN

துறையூரில் ஞாயிற்றுக்கிழமை பைக்கில் சென்ற இளைஞா் காா் மோதி உயிரிழந்தாா்.

துறையூா் -முசிறி சாலையில் பழைய மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் அருகே வசிப்பவா் வையாபுரி மகன் பிரபு (35), எலக்ட்ரீஷியன். இவருக்கு மனைவியும், ஆண் குழந்தையும் உள்ளனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பைக்கில் துறையூரில் உள்ள புறவழிச்சாலையில் சென்ற பிரபு பெரம்பலூரிலிருந்து கோவை நோக்கி வந்த காா் மோதி பலத்த காயமடைந்தாா்.

துறையூரில் அளிக்கப்பட்ட முதலுதவிக்குப் பிறகு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து காரை ஓட்டிய பெரம்பலூா் மாவட்டம், புதுநடுவலூரைச் சோ்ந்த குமரேசன் மகன் சரண்ராஜை (40) கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

இளைஞா்களை ஈா்க்க கோயில்களில் நூலகங்கள்: இஸ்ரோ தலைவா் சோமநாத்

SCROLL FOR NEXT