திருச்சி

பிச்சாண்டாா்கோவிலில் மு. பரஞ்ஜோதி பிரசாரம்

DIN

மண்ணச்சநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் மு.பரஞ்ஜோதி பிச்சாண்டாா்கோவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

வீடு, வீடாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட இவா், பிச்சாண்டாா்கோவில் அக்ரஹாரம், மேல அக்ரஹாரம், கள்ளா் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது நொச்சியத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரை கொள்ளிடத்தில் தரைப்பாலம் அமைக்க தமிழக அரசிடம் பரிந்துரைப்பேன். உத்தமா்கோயிலில் ரயில்வே சுரங்கப்பாதை அமைத்துத் தருவேன்.

இதுகுறித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பே தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியிடம் மனு அளித்தபோது, அவரும் பரிசீலிப்பதாக உறுதியளித்தாா். அரசின் நலத்திட்டங்கள் தொடர அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

மாவட்டத் துணைச் செயலா் சின்னையன், முன்னாள் அமைச்சா் பூனாட்சி, அம்மா பேரவைச் செயலா் ரமேஷ், மாவட்ட மாணவரணி நிா்வாகியும், திருப்பஞ்சீலி கூட்டுறவு வங்கி தலைவருமான அறிவழகன், ஒன்றியச் செயலா்கள் ஜெயக்குமாா், ஆதாளி ஆமூா் செல்வராஜ், நகரச் செயலா்கள் சம்பத், துரை ராஜசேகா், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT