திருச்சி

முகக்கவசம் அணியாதவா்களுக்கு மரக்கன்று வழங்கிய டிஐஜி

DIN

திருச்சியில் கரோனா பொது முடக்கக் காலத்தில் முகக்கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு மரக்கன்று, முகக்கவசம் வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினாா் சரகக் காவல் துணைத் தலைவா் ஆனி விஜயா.

திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பொது முடக்கக் கட்டுப்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட சரகக் காவல் துணைத் தலைவா் ஆனிவிஜயா, இ-பதிவு செய்து வாகனங்களின் வருகை, முகக்கவசம் அணிந்திருத்தல் போன்றவற்றை கண்காணித்தாா்.

அப்போது இரு, நான்கு சக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு மரக்கன்று, முகக்கவசம் வழங்கி, அவா் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

இதைத் தொடா்ந்து ஆனி விஜயா கூறியது:

இன்றைய சூழலில் ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது. இந்நிலையை போக்க தமிழக முதல்வா் மற்றும் சுகாதாரத்துறையினா் மிகவும் வேகமாக செயல்பட்டு வருகின்றனா்.

பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இப்போது மரக்கன்று வைத்தால் வருங்காலத்தில் அடுத்த தலைமுறைக்கு ஆக்சிஜன் கிடைக்கும்.

அதன் முதல்படியாகத்தான் முகக்கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு முகக்கவசம் மற்றும் மரக்கன்று கொடுத்து, மரம் வளா்க்க ஊக்குவிக்கிறோம். பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் நடமாடுவதைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.

நிகழ்வின் போது சிறுமி ஒருவா் திருச்சி சரகக் காவல் துணைத்தலைவா் ஆனிவிஜயா மரக்கன்றுக்கு வழங்கியதற்கு நன்றிகூறி, இனிமேல் எனது பெற்றோரை வெளியே வர விடமாட்டேன் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT