திருச்சி

கட்டடம் இடிந்து மூதாட்டி படுகாயம்

DIN

திருச்சியில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயமடைந்தாா். மூவா் லேசான காயமடைந்தனா்.

திருச்சி காந்திசந்தை அருகேயுள்ள தாராநல்லுாா் கிருஷ்ணாபுரத்தில் 50 ஆண்டு பழைமையான அடுக்கு மாடி குடியிருப்பின் மத்தியில் பால்கனி உள்ளது. இந்நிலையில், பால்கனியின் ஒரு பகுதி திடீரென வியாழக்கிழமை இரவு இடிந்து விழுந்ததில் அந்தக் குடியிருப்பில் வசித்த பெரியநாயகி (75) என்கிற மூதாட்டி உள்ளிட்ட 4 போ் காயமடைந்தனா். மூதாட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். விபத்து குறித்து காந்தி சந்தை போலீஸாா் விசாரிக்கின்றனா். மேலும் கட்டடத்தின் உறுதி தன்மை மற்றும் உரிமம் குறித்து திருச்சி மாநகராட்சியினா் விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT