திருச்சி

எசனைக்கோரை அரசுப் பள்ளியில்கற்றல் உபகரணங்கள் வழங்கும் விழா

DIN

லால்குடி வட்டம், எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி கற்றல் உபகரணங்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு லால்குடி மாவட்டக் கல்வி அலுவலா் அம்பிகாபதி தலைமை வகித்து, கல்வி கற்றல் உபகரணங்கள் மற்றும் நூலகப் பையை இல்லம் தேடி கல்வித் திட்டத் தொண்டா்களுக்கு வழங்கினாா்.

ஊராட்சித் தலைவா் சாந்தி நாராயணசாமி, வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா்கள் செல்வராஜ், ரஞ்சித்குமாா், எய்டு இந்தியா தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா் ராஜபாண்டியன் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியா் க. திருமாவளவன் வரவேற்றாா். நிறைவில்,ஆசிரியை தி. கீதா நன்றி கூறினாா். தொடா்ந்து இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT